|
அழகப்பபுரம் மேற்கு பஸ் ஸ்டாண்டில் அமைந்துள்ள அன்னை
வேளாங்கண்ணி கெபி திருவிழா ஜூலை 28-ந் தேதி தொடங்கியது
.இது ஆகஸ்டு 6-ந் தேதி நிறைவு பெறுகிறது. திரு விழா
நாட்களில் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள் திருப்பலி
ஆகியவை நடைபெறுகிறது.
28-ந் தேதி அழகை நற்பணி மன்றம்,
29-ந் தேதி தோமினிக் சாவியோ ,ஜான் போஸ்கோ சபையினர்,
30-ந் தேதி அமல அன்னை ,மரிய கொரற்றி சபையினர்,
ஆகஸ்டு 1-ந் தேதி புனித சூசையப்பர் ,சிறிய புஷ்பத்தின்
சகோதரர்கள் சபையினர்,
2-ந் தேதி நற்கருணை வீராங்கனை ,சிறுமலர் சபையினர்,
3-ந் தேதி திருக்குடும்ப சபை,
4-ந் தேதி வின்சென்ட் தே பவுல் சபை ஆகியோர்
சிறப்பிக்கின்றனர்.
5-ந் தேதி காலை 5 மணிக்கு நவநாள் திருப்பலி , மாலை 6
.30 மணிக்கு வீரவநல்லூர் பங்குத்தந்தை ஜோக்கிம்
தலைமையில் மாலை ஆராதனை ,
6-ந் தேதி காலை 5 மணிக்கு திருவிழா கூட்டுத்திருப்பலி
ஆகியவை நடைபெறுகிறது.
6 -ந் தேதி இரவு 7 மணிக்கு அழகை நற்பணி மன்றம் சார்பில்
மாபெரும் அசன விருந்து நடைபெறுகிறது. இதை பங்குத்தந்தை
பீற்றர் பால் ஆசீர்வதித்து தொடங்கி வைக்கிறார்.
திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பீற்றர் பால், உதவி
பங்குத்தந்தை எஸ் .கே.மணி, பங்குப்பேரவையினர்,
இறைமக்கள் ஆகியோர் செய்துள்ளனர். |